search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போரூர் விபத்து"

    போரூர் மேம்பாலத்தில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    போரூர்:

    சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் ஜமுனா (வயது 47). இவரது மகன் காமேஷ் (19). ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    ஜமுனாவும், காமேசும் வேடந்தாங்கலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    காலை 7 மணி அளவில் அவர்கள் போரூர் மேம்பாலத்தில் வந்தனர். அப்போது அங்கு மணலிக்கு இரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரத்தில் நின்ற லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜமுனாவும், காமேசும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அதில் டிரைவர் தூங்கியதாக தெரிகிறது. இதையடுத்து லாரி டிரைவர் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் தாய்- மகன் பலியான சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×