search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போரில் தீ விபத்து"

    • இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.
    • உடனடியாக குருசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    பெருந்துறை

    பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வண்ணாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் குருசாமி வயது (67).

    இவர் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது வீட்டில் மாடு மற்றும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். மாட்டு தீவனமாக சோளத்தட்டு போரை வீட்டின் அருகில் அமைத்திருந்தார்.

    இந்நிலையில் அணைக்காத தீ காரணமாக இந்த சோளத்தட்டு போர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    உடனடியாக குருசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    நிலைய அலுவலர் (பொறுப்பு) நாகேஸ்வரன் தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    ×