search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராளிகள்"

    • ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கம் அமைக்க ஆய்வு மேற்கொண்டார்.

    விழுப்புரம்:

    உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடி , மாவட்ட கலெக்டர் பழனி,தலைமையில், விக்கிரவாண்டி எம்.எல்ஏ. புகழேந்தி , விழுப்புரம் எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் ஆ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் விழு ப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது ,

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி தியாகிகள் அரங்கம் அமைத்திட அறிவித்தார்கள்.

    மேலும், 6.9.2021 சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 -ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், அண்ணா மற்றும் கருணாநிதி அமைச்ச ரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமானஆ.கோவிந்தசாமி யின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைத்திட அறிவித்தார். அதனடிப்படையில், விழுப்பு ரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 1.12.0 ஹெக்டேர் பரப்பாவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ெபான்முடி கூறினார்.

    ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவர் ஜனகராஜ் மாநில தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் அன்னியூர் சிவா ,வருவாய் கோட்டாட்சியர் குமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்)சிவா, உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் பாலாஜி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)கலையாமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×