search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள் ஒழிப்பு"

    • ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்மசி பிராக்டிஸ் துறை சார்பில் நடைபெற்றது
    • விழிப்புணர்வு பதாகையில் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்மசி பிராக்டிஸ் துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து அங்கு விழிப்புணர்வு பதாகைகளை பார்மசி பிராக்டிஸ் துறை தலைவரும், பேராசிரியருமான முனைவர் பொன்னுசங்கர், முனைவர்கள் கவுதமராஜன், செந்தில், பிரவின், பாபு, கீர்தனா, காளிராஜன், வடிவேலன், கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த விழிப்புணர்வு பதாகையில் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

    ×