search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ஊசி பயன்பாடு"

    • ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என உள்ளாட்சிகள் தினத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறத்தப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கூட்டர ங்கில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நாகமணிவெங்கடேசன் தலைமை வகித்தார்.

    துணைத்தலைவர் ஜெயந்திமாயாண்டி முன்னி லை வகித்தார். எழுத்தர் பிச்சைமணி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் பங்கேற்ற முத்துபாண்டி என்பவர் பேசும்போது, ரூ.4.67 லட்சம் ஊராட்சி நிதியை முறைகேடு செய்த தாகவும், அந்த நிதியை திரும்ப செலுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.

    இந்த நிதியை யார் செலுத்துவது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் நானே அந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுகிறேன் என்றார். இதனையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போதை ஊசி பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீ சார் அதிரடி சோதனை நடத்தி சுமார் 6 பேரை கைது செய்தனர்.

    ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்ைல. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி விற்பனை செய்யும் கும்பல் மதுரை, திருச்சி மாவட்ட ங்களில் இருந்து புரோக்க ர்கள் மூலம் இதனை சப்ளை செய்து வருகின்றனர். எனவே நேற்று நடந்த கிராம சபை கூட்டத்திலும் பல்வேறு ஊராட்சிகளில் போதை ஊசி பயன்பாடு குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.

    கிராமப்புறங்களில் போதை ஊசி பயன்படுத்து வோர் மற்றும் அதனை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×