search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு"

    • கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மலைச் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
    • இதனால் அதிகாரிகள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலையை பார்வையிட்டனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்திலும் ஆஃப் சீசனிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மலைச் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதற்கு தீர்வு காண அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலுக்கு தற்போதுவரை தீர்வு காணப் படவில்லை. எனவே மாற்றுச்சாலை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கொடைக்கானல் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் அதிகாரிகள் வில்பட்டி-கோவில்பட்டி, நார்த்தன் தொட்டி, வெங்கல வயல் பகுதிகளில் இருந்து பாரதி அண்ணா நகர் வரை மாற்று சாலை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாலையை பார்வை யிட்டனர்.

    கொடைக்கானல் வட்டாட்சியர் முத்துராமன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வரதன், வி.ஏ.ஓ. சுசீந்தரன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழுவினர் ஆய்வில் கலந்து கொண்டனர். கொடை க்கானலில் இருந்து பழனி வரை செல்லும் பழமையான சாலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளால் சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு இந்த சாலையை மேம்படு த்தினால் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு கிடை க்கும். மேலும் விவசாய நிலங்களும் செழிக்கும். சுற்றுலா தொழிலும் மேம்படும்.எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானல் நகரின் முக்கிய சந்திப்பு மூஞ்சிக்கல் பகுதியாகும். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவது இப்பகுதியாகும்.
    • பிரதான சாலையிலேயே மணல் ஜல்லி,செங்கல் கொட்டி வியாபாரம் செய்து மேலும் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரின் முக்கிய சந்திப்பு மூஞ்சிக்கல் பகுதியாகும். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவது இப்பகுதியாகும்.

    மூஞ்சிக்கல் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் போக்குவரத்து நெரிசல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில் மணல் ஜல்லி வியாபாரிகளுக்கும் திடீர் கடைக்காரர்களுக்கும் நெடுஞ்சாலை துறையினர் அனுமதி அளித்தது போல் செயல்பட்டு வருகின்றனர்.

    பிரதான சாலையிலேயே மணல் ஜல்லி,செங்கல் கொட்டி வியாபாரம் செய்து மேலும் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால் இப்பகுதி பிரதான சாலையிலும் வளைவுச்சலையிலும் முறையாக வாகனங்கள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    மாலை நேரங்களில் இப்பகுதியில் இயங்கும் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகள் இந்த வளைவு சாலையில் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்களால் நடுரோட்டில் நடந்து செல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ப்பலி ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    காலை மாலை வேளைகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் கடந்து செல்லும் இப்பகுதி சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எந்நேரமும் உயிர்ப்பலியோ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து காவல்துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் இதனை கண்டு கொள்வதாக இல்லை.உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் மணல், ஜல்லி வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்தகை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×