search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருள் கண்காட்சி"

    • தேசிய ஊட்டச்சத்து மாத உணவு பொருள் கண்காட்சி நடைபெறுகிறது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத உணவு பொருள் கண்காட்சியினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் "ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினையும் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் அனைவரும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கலியமூர்த்தி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ×