search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு இடையூறாக"

    • மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
    • பள்ளிவிளை கிங் மேக்கர் தெருவில் பயன்படாத குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்தது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்மேயர் மகேஷ் இன்று காலை 6, 7-வது வார்டுக் குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிவிளை கிங் மேக்கர் தெருவில் பயன்படாத குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி னார்கள். இதேபோல் மேலும் 2 இடங்களில் பயன் படாத குடிநீர் தொட்டிகள் பொதுமக்களுக்கு இடை யூறாக இருந்தது தெரிய வந்தது. அந்த குடிநீர் தொட்டி களையும் அகற்ற மேயர் மகேஷ் உத்தர விட்டுள்ளார். குறுந்தெரு பகுதியில் ஆய்வு மேற் கொண்டபோது கழிவுநீர் ஓடையில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அந்த ஓடையை உடனடியாக சுத்தம் செய்ய மேயர் உத்தரவிட்டார்.

    ராஜூ நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வின் போது உதவி பொறியாளர் ராஜாசீலி, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர்கள் அனுஷா, பிரைட், மேரி ஜெனட் விஜிலா ஆகியோர் உடனிருந்தனர்.

    இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டுக்குட்பட்ட சக்தி கார்டன், வாட்டர் லைன் தெருவில் ரூ.17 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். கவுன்சிலர் ஸ்ரீலிஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    ×