search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களிடம் குறைகள் கேட்பு"

    • மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
    • திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் தேனி மாவட்டத்தில் முதல் நிலை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய பேரூராட்சியாக உள்ளது. பேரூராட்சி க்குட்பட்ட பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர்.

    இந்நிலையில் பல்வேறு தெருக்கள் மற்றும் குடியி ருப்பு பகுதிகளில் சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தித் தரும்படி பொதுமக்கள் கோரிக்கையை விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளிகண்ணன் ராமசாமி மற்றும் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    சாலை வசதிகள் இல்லாத பகுதிகளில் சாலை வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், அனைத்து அடிப்படை வசதிககள் மற்றும் பிற இடங்களில் சாலைகளை சீரமைத்து தருவதாகவும் உறுதியளித்த னர். மேலும் வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து பேரூராட்சி தூய்மை பணி யாளர் வாகனம் வரும்போது வழங்கும்படி பொது மக்களிடம் அறிவுறுத்தினர்.

    திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×