search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைனான்சியர் பலி"

    திண்டுக்கல் அருகே பைக் விபத்தில் பைனான்சியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    குள்ளனம்பட்டி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 31). திருமணமானவர். இவர் சுற்று வட்டார கிராமங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அக்கரைப்பட்டி பிரிவு அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.

    இதில் சுவரில் தலை மோதி சசிகுமார் படுகாயமடைந்தார். அதிகாலை நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் உதவியின்றி தவித்துள்ளார். காலையில் டீக்கடை திறக்க வந்த பெண்மணி ரத்த வெள்ளத்தில் கிடந்த சசிகுமாரை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சசிகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×