search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேர் குவிந்தனர்"

    • மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணைக்கும் கடந்த 2 வாரமாக ெபாதுமக்கள் வருகை அதிரித்து வருகிறது.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இந்த அணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் மேல் வெயிலின் அளவு பதிவாகி வருகிறது இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக ரித்த வண்ணம் இருந்து வருகிறது.

    இதையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் நீர்நிலைகளை தேடி சென்று குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    இதே போல் கொடிவேரி தடுப்பணைக்கும் கடந்த 2 வாரமாக பொதுமக்கள் வருகை அதிரித்து வருகிறது. அவர்கள் குடும்பத்துடன் வந்து வெயிலின் சூட்டை தணிப்பதற்காக அணையில் குளித்து சென்ற வண்ணம் உளள்னர்.

    இந்த நிலையில் விடுமுறை தினம் என்பதால் நேற்று கொடிவேரி அணை யில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்தனர்.

    ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமிகள் என குடும்பத்துடன் வந்த மக்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பலர் வெயிலினால் தண்ணீரில் இருந்து வெளியே வராமல் அப்படியே நீண்ட நேரம் குளித்து கொண்டே இருந்தனர்.

    மேலும் நேரம் செல்ல செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் குளித்து விட்டு தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும், அங்கு விற்பனை செய்ய ப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டனர்.

    இதை யொட்டி நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்கொடிவேரிக்கு வந்திருந்தனர்.

    ×