search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் கால மீட்பு"

    • அறந்தாங்கியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது
    • பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டம் மூலம் பேரிடர்கால மீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாடு முழுவதும் பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த மாதம் 18ம் தேதி முதல் 12 நாட்களுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று அறந்தாங்கியில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்த செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தனர். மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் லீமாசைமன் உள்ளிட்ட சுகாதாரத்துறை, மருத்துவத்துறை பொதுப்பணித்துறை, மின்வாரியத்து றை, தீயணைப்புத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×