search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்கள் திடீர் போராட்டம்"

    • 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில். திண்டுக்கல், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 பேர் படித்து வருகின்றனர்.
    • இந்நிலையில் பள்ளியின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக கூறி இன்று பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த காந்திகிராமம் பல்கலைகழக வளாகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. திண்டுக்கல், வத்தலகுண்டு பட்டிவீர ன்பட்டி அய்யம்பாளையம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 பேர் படித்து வருகின்றனர். பள்ளி முதல்வராக டாக்டர் முருகேஸ்வரன் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் பள்ளியின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாக கூறி இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். அனைத்து பாட பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். பள்ளியின் நிர்வாக குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய அரசு தலையிட கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×