search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெற்றோர்கள் அதிர்ச்சி"

    • அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன.
    • விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து பல்வேறு மாணவ மாணவிகள் இந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்வது வழக்கம். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள் பஸ்சில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு மாணவன், பஸ்சினுள் அமர்ந்து பயணம் செய்ய இடமிருந்தும், பஸ்சின் பின்பக்கத்தில் உள்ள ஏணியில் பயணம் செய்தார். திண்டிவனம் மேம்பாலம் அருகேயுள்ள நேரு வீதியில் இருந்து மரக்காணம் வரை இந்த மாணவன் ஏணியில் தொங்கியபடி சென்று ள்ளான். இதனை சாலையில் சென்றவர்கள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் பஸ் பின்பக்க ஏணியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் குறித்து பெற்றோர்கள் தங்களின் அதிர்ச்சியை பதிவிட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    • இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி ஆங்கில வழி தொடக்கப்பள்ளியில், குப்பைகளை அகற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் வகுப்பு நேரங்களில் அங்கு படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் வகுப்பு நேரங்களில், எந்த காரணத்தைக் கொண்டும் பிற பணிகளுக்கு அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பது விதிமுறை.

    அவற்றையும் மீறி சில பள்ளிகளில் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனை உடனே தடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    எனவே இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

    ×