search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரும்பத்து ஊராட்சி"

    • கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
    • பனைவிதைகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நட்டு தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனிய னுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    மேட்டூர் - தோரணமலை செல்லும் சாலையில் சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டது.இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி, வேளாண்மை அதிகாரி அபிராமி, இணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தொழில் நுட்ப அதிகாரி கிருஷ்ணமூர்த்தி , கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×