என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு
நீங்கள் தேடியது "பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு"
மழை முற்றிலும் ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MullaPeriyar
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்றது.
இந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக திடீரென முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு 381 கன அடி நீரே வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த நீர் பாசனத்துக்குப் போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து 1376 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 2,050 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர் மட்டம் 68.42 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 115.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. #MullaPeriyar
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்றது.
இந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக திடீரென முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு 381 கன அடி நீரே வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த நீர் பாசனத்துக்குப் போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து 1376 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 2,050 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர் மட்டம் 68.42 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 115.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. #MullaPeriyar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X