search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு கத்திக்குத்து"

    • வாலிபர்கள் 2 பேர் தங்களுக்கு மசாஜ் செய்யுமாறு கூறி தகராறில் ஈடுபட்டனர்.
    • வாலிபர்கள் கத்தியை எடுத்து மினிமோலின் தலை, கை ஆகிய பகுதிகளில் குத்தினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எம்.கே. பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மினிமோல் (வயது 43). இவர் சூலூரில் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுசிக், அவருடன் மற்றொரு வாலிபரும் மினிமோலின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து விடும்படி கூறினர். அதற்கு மினிமோல் வீட்டில் வைத்து மசாஜ் செய்ய முடியாது. எனவே மசாஜ் சென்டருக்கு வாருங்கள் செய்து விடுகிறேன் என கூறினார். ஆனால் அந்த வாலிபர்கள் செல்ல மறுத்து தகராறு செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மினிமோலின் தலை, கை ஆகிய பகுதிகளில் குத்தினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மினிமோலை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

    ×