search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்கை"

    • சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது.
    • சிறைவாசிகள் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை காந்திபுரத்தில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் மூலம் ஜெயில் நுழைவுவாயில் அருகே ஏற்கனவே பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் காந்திபுரத்தில் இருந்து மகளிர் பாலிடெக்னிக் செல்லும் சாலை சந்திப்பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. கைதிகளால் நடத்தப்படும் இந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தனர். தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் தமிழக சிறைத்துறை முதலாவது இடத்தில் உள்ளது. சிறைச்சாலை என்பது தண்டிக்க கூடிய இடமாக இல்லாமல், மன்னிக்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும். ஓட்டல்களில் கிடைக்காத உணவு கூட சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு உணவு பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தண்டனை காலத்தில் கூட சிறைவாசிகள் சம்பாதித்து அவர்களது குடும்பத்திற்கு அனுப்பும் வகையில் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், கோவை ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு ஜெயில்கள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சிறைவாசிகளின் மறு வாழ்வுக்கான கல்வி, திறன் மேம்பாடு தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    ஜெயில் வளாகங்களில் அங்காடிகள் தொடங்கி சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் பாலி விஸ்கோஸ் துணி, தோல் காலணிகள், தோல் பெல்ட், சலவை, குளியல் சோப் கைவினைப் பொருட்கள், நோட்டுபுத்தகம், பூச்செடிகள், மண்புழு உரம், காய்கறிகள் ஓவியங்கள், மழை கோட்டு, மரசெக்கு எண்ணைகள் அடுமனை பொருட்கள், போர்வைகள், போன்றவைகள் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்பட்டு பிரீடம் என்ற பெயரில் ஜெயில் அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த செயல்பாட்டின் மூலம் சிறைவாசிகள் தினசரி ஊதியம் மற்றும் லாபத்தில் ஒரு பங்கு தொகையையும் பெற்று வருகின்றனர். ஜெயில் அங்காடிகள் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக மத்திய ஜெயில் சென்னை புழல், வேலூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் தமிழக அரசு சிறைத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுடன் இணைந்து நடத்துகிறது. தற்போது புதிதாக காந்திபுரத்தில் மற்றொரு பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு உள்ளது. 

    ×