search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூம்புகார் கப்பல்"

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
    • இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.

    இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

    இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • ற்றுலா பயணிகள் பார்வையிடுவற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 2 படகுகள் வாங்கப்பட்டு பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சட்ட மன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்ட பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் வருவதால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக

    ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 2 படகுகள் வாங்கப்பட்டு பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இந்த படகுகள் சுற்றுலா பயணி களுக்கு பயன்படுத்தப்ப டாமலேயே தி.மு.க. ஆட்சி யில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையை மாற்றி சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது என்ற காரணத்தினை கருத்தில் கொண்டு, தி.மு.க. அரசு படகுகளை இயக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கி உள்ளது.

    சுற்றுலா பயணிகள் பயன்பெறும் விதத்தில் உடனடியாக நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ள 2அதிநவீன படகு களையும் உடனடியாக இயக்கிட வேண்டும். கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி அடை வதற்கு இந்த படகு சேவை ஒரு மைல் கல்லாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×