search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலி உயிரிழப்பு"

    • வனப்பகுதியில் அத்துமீறி இரும்பு வளையங்களால் ஆன கன்னிகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
    • வனத்துறையினர் இவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை, மான், யானை, புலி போன்ற பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகி ன்றன.

    இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த தெங்குமர ஹாடா செல்லும் வழியில் கொத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொமரத்தூர் வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திலேயே மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வனப்பகுதியில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது.

    இந்த நிலையில் உடற்கூறு ஆய்வின் முடிவில் புலி வனப்பகுதியில் மான்கள் மற்றும் பன்னிகளை வேட்டையாட வைத்துள்ள இரும்பு கம்பியால் ஆன கன்னியில் புலி சிக்கியதால் கடந்த 10 நாட்களாக அதிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமலும், உணவில்லாமலும் புலி இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வனப்பகுதியில் அத்துமீறி இரும்பு வளையங்களால் ஆன கன்னிகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சுசில் குட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், நாச்சிமுத்து, பத்மகுமார், லோகேஷ் பால், தினகரன், சௌந்தர்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வனப்பகுதிகளில் பன்றிகள் மற்றும் மான்களை வேட்டையாட அவ்வப்போது இரும்பு கம்பியால் ஆன கன்னிகளை வைத்து வந்தது தெரிய வந்தது.

    இவர்கள் வைத்த கன்னியில் புலி சிக்கி இறந்தது தெரியவந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் இவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    உடனடியாக பவானிசாகர் வனச்சரகர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த புலியை நேரில் ஆய்வு செய்து மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து புலியை பிரேத பரிசோதனை செய்து புலியின் குடல் மற்றும் இரைப்பையை பெங்களூரு மற்றும் டெல்லிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை. ஆய்வு முடிவு வந்த பிறகு தான் புலி எவ்வாறு இறந்தது என தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புலி உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் புலி இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என கூறினர்.

    ×