search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர் விசாரணை"

    • வனப்பகுதியில் அத்துமீறி இரும்பு வளையங்களால் ஆன கன்னிகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
    • வனத்துறையினர் இவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை, மான், யானை, புலி போன்ற பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகி ன்றன.

    இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த தெங்குமர ஹாடா செல்லும் வழியில் கொத்தமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொமரத்தூர் வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திலேயே மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு வனப்பகுதியில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது.

    இந்த நிலையில் உடற்கூறு ஆய்வின் முடிவில் புலி வனப்பகுதியில் மான்கள் மற்றும் பன்னிகளை வேட்டையாட வைத்துள்ள இரும்பு கம்பியால் ஆன கன்னியில் புலி சிக்கியதால் கடந்த 10 நாட்களாக அதிலிருந்து வெளியே தப்பிக்க முடியாமலும், உணவில்லாமலும் புலி இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வனப்பகுதியில் அத்துமீறி இரும்பு வளையங்களால் ஆன கன்னிகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சுசில் குட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ், நாச்சிமுத்து, பத்மகுமார், லோகேஷ் பால், தினகரன், சௌந்தர்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வனப்பகுதிகளில் பன்றிகள் மற்றும் மான்களை வேட்டையாட அவ்வப்போது இரும்பு கம்பியால் ஆன கன்னிகளை வைத்து வந்தது தெரிய வந்தது.

    இவர்கள் வைத்த கன்னியில் புலி சிக்கி இறந்தது தெரியவந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் இவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் பவானி சாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குமரத்துர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 6 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    உடனடியாக பவானிசாகர் வனச்சரகர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த புலியை நேரில் ஆய்வு செய்து மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து புலியை பிரேத பரிசோதனை செய்து புலியின் குடல் மற்றும் இரைப்பையை பெங்களூரு மற்றும் டெல்லிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    புலி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவில்லை. ஆய்வு முடிவு வந்த பிறகு தான் புலி எவ்வாறு இறந்தது என தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புலி உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் புலி இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என கூறினர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள், கைதான 2 பேரும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வைரக்கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஹெட்சன் மற்றும் போலீசார் நேற்று கீழப்பத்தையில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 2 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கீழப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 42), மஞ்சுவிளையை சேர்ந்த சுசில்குமார் (57) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் வைரக்கற்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், சுமார் ½ கிலோ வைரக்கற்களையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள், கைதான 2 பேரும் களக்காடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், வனச்சரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுசில்குமார், வேல்முருகன் ஆகியோருக்கு வைரக்கற்கள் எப்படி கிடைத்தது? மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதா?, எங்கிருந்தாவது கடத்தி வரப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைதான சுசில்குமார், முன்னாள் கிராம வனக்குழு தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 60 மீட்டர் தொலைவில் ஆண்யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.
    • யானை உடல்நல க்குறைவால் இறந்து உள்ளதா? அல்லது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதா? என வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை வனச்சர கத்திற்கு உட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடாகம் காப்பு காட்டிற்கு வெளியே 60 மீட்டர் தொலைவில் ஆண்யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.

    மேலும், யானையின் வலது தந்தம் காணாமல் போயிருந்தது. இடது தந்தம் மட்டும் இருந்தது. இது குறித்து ரோந்து சென்ற வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வனத்துறையினர் யானை இறந்தது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    யானை உடல்நல க்குறைவால் இறந்து உள்ளதா? அல்லது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதா? என வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் விழுந்து யானை இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், யானையின் உடற்கூராய்வை இன்று நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னர் யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யானை இறந்தது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

    வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை அழுகிய நிலையில் இருந்து உள்ளது. மேலும் யானையின் தந்தம் ஒன்று மாயமாகி உள்ளது. யானையின் கண் இல்லாமல் குழி விழுந்து காணப்பட்டது. யானையை யாராவது கண்களுக்காகவும், தந்தத்தி ற்காகவும் வேட்டையாடி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. யானை அழுகிய நிலையில் இருப்பதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம். வனத்து றையினர் யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க இரவு பகலாக ரோந்து செல்லும் வனத்து றையினருக்கு பல நா ட்களுக்கு முன்பு இறந்து போன யானையின் உடல் எவ்வாறு கண்ணில் படாமல் போனது.

    யானை இறந்து அழுகிய துர்நாற்றம் வீசி இருக்கும், யானைகள் கூட்டம் ஒரு யானை இறந்ததும் பிளிறல் சத்தத்தை எழுப்பி இருக்கும். இதனை வனத்துறையினர் கவனிக்காமல் விட்டு விட்டனர்.

    யானைகள் அழிந்தால் காடுகள் அழிந்து விடும், மற்ற விலங்குகள் வனப்பகுதியில் இருக்காது. எனவே வனத்துறை உயர் அதிகாரிகள் யானையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

    ×