என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest department investigation"

    • 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது.
    • மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பெரிய ஏரி பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் நேற்று துப்பாக்கியால் சுடும் சத்தம் பல முறை கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அங்கு 2 மான்கள் துப்பாக்கியால் சுட்டதில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்து வேட்டை கும்பல் மான்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மான்களை மீட்டு வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மான்களை சுட்டு வேட்டை யாடியது யார்? வேட்டைக்கு பயன்படுத்தியது நாட்டு துப்பாக்கியா? அல்லது லைசன்ஸ் துப்பாக்கியா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து மான்களை பிரேத பரிசோதனை செய்த பிறகு அதில் உள்ளது பால்ரஸ் குண்டா அல்லது துப்பாக்கி குண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல் தெரிய வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.

    இந்த பகுதியில் மான்களை வேட்டையாடிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே பகுதியில் ஒரு மான் விபத்தில் சிக்கி உயிர் இழந்தது. இதுகுறித்து செந்துறை போலீசார் மற்றும் வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு புலியின் முன்கால் பகுதியளவு துண்டிக்கப்பட்டிருந்தது.
    • பிராந்திய சண்டைகள் காரணமாக புலிகள் இறப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இதில் புலி ஊருக்குள் புகுந்து மக்களை அடிக்கடி தாக்கி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். இதனை தொடர்ந்து அந்த புலியை உயிருடனோ, சுட்டுப் பிடிக்கவோ வனத் துறை உத்தரவிட்டது.

    அதன் பேரில் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்ற நிலையில், காட்டுப் பகுதியில் அந்த புலி இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

    அந்த புலி எப்படி இறந்தது? என்பது மர்மமாக உள்ளது. இந்த மர்மம் விலகு வதற்குள் நேற்று ஒரேநாளில் 3 புலிகள் இறந்த நிலையில் வயநாட்டில் தனித்தனியாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெற்கு வயநாடு வனப்பிரிவின் சுண்டேலுக்கு அருகில் உள்ள ஓடதோடு பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் சுமார் 1 வயது பெண் புலி சடலத்தை முதலில் அந்தப் பகுதியினர் பார்த்துள்ளனர்.

    ஆனால் அந்தப் புலியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து வந்து புலியின் உடலை மீட்டனர். இந்த சூழலில், வயநாடு வன விலங்கு சரணாலயத்தின் கீழ் உள்ள குறிச்சியாடு வனப்பகுதியின் தத்தூர் பிரிவில் ஆண், பெண் என மேலும் 2 புலிகளின் சடலங்கள் வனத்துறையால் கண்டெடுக்கப்பட்டன.

    இதில் ஒரு புலியின் முன்கால் பகுதியளவு துண்டிக்கப்பட்டிருந்தது. அது எப்படி நடந்தது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி வயநாடு வனவிலங்க காப்பாளர் வருண் டாலியா கூறுகையில், இது புலிகள் இனச்சேர்க்கை செய்யும் காலம். அப்போது பிராந்திய சண்டைகள் காரணமாக புலிகள் இறப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    இந்த காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் புலிகள் தங்கள் பகுதியை கடுமையாக பாதுகாப்பதால் மோதல்களுக்கு வழி வகுக்கும் என்றார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) பிரேத பரிசோதனை நடைபெற்ற பிறகு தான் புலிகள் இறப்புக்கான காரணம் உறுதியாக தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே ஓரே நாளில் 3 புலிகள் சடலம் கிடந்தது தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வனம் மற்றும் வனவிலங்கு மந்திரி சசீந்திரன் உத்தர விட்டுள்ளார். இதற்காக வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் கொண்ட தனி குழுவும் அமைத்துள்ளார். இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 60 மீட்டர் தொலைவில் ஆண்யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.
    • யானை உடல்நல க்குறைவால் இறந்து உள்ளதா? அல்லது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதா? என வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை வனச்சர கத்திற்கு உட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடாகம் காப்பு காட்டிற்கு வெளியே 60 மீட்டர் தொலைவில் ஆண்யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது.

    மேலும், யானையின் வலது தந்தம் காணாமல் போயிருந்தது. இடது தந்தம் மட்டும் இருந்தது. இது குறித்து ரோந்து சென்ற வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வனத்துறையினர் யானை இறந்தது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    யானை உடல்நல க்குறைவால் இறந்து உள்ளதா? அல்லது தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதா? என வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் விழுந்து யானை இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், யானையின் உடற்கூராய்வை இன்று நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னர் யானை இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யானை இறந்தது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

    வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை அழுகிய நிலையில் இருந்து உள்ளது. மேலும் யானையின் தந்தம் ஒன்று மாயமாகி உள்ளது. யானையின் கண் இல்லாமல் குழி விழுந்து காணப்பட்டது. யானையை யாராவது கண்களுக்காகவும், தந்தத்தி ற்காகவும் வேட்டையாடி இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. யானை அழுகிய நிலையில் இருப்பதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம். வனத்து றையினர் யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க இரவு பகலாக ரோந்து செல்லும் வனத்து றையினருக்கு பல நா ட்களுக்கு முன்பு இறந்து போன யானையின் உடல் எவ்வாறு கண்ணில் படாமல் போனது.

    யானை இறந்து அழுகிய துர்நாற்றம் வீசி இருக்கும், யானைகள் கூட்டம் ஒரு யானை இறந்ததும் பிளிறல் சத்தத்தை எழுப்பி இருக்கும். இதனை வனத்துறையினர் கவனிக்காமல் விட்டு விட்டனர்.

    யானைகள் அழிந்தால் காடுகள் அழிந்து விடும், மற்ற விலங்குகள் வனப்பகுதியில் இருக்காது. எனவே வனத்துறை உயர் அதிகாரிகள் யானையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளன.

    சந்தனமர கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் இருக்கும்போது சந்தன மரங்கள் அதிகமாக வெட்டி கடத்தப்பட்டன. அவன் மறைவுக்குப்பிறகு சந்தரமரம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டது.

    ஒரு சிலர் கடத்தி வந்ததையும் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.எனினும் வனத்துறையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வந்தனர். கடத்தல் காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதி கே.என்.பாளையம் வனச்சரகம் கானாகுந்தூர் பகுதியில் வனத்துறையினர். ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 5 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்கள் அந்த சந்தன கட்டைகளை கடத்தி கொண்டு சென்றது தெரியவர இந்த சந்தன கட்டைகள் அவர்களுக்கு எப்படி வந்தது? யாரிடம் வாங்கியது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×