என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்தன கட்டைகள் கடத்திய 5 பேர் பிடிபட்டனர்- வனத்துறையினர் தீவிர விசாரணை
Byமாலை மலர்12 July 2018 10:31 AM GMT (Updated: 12 July 2018 10:31 AM GMT)
சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளன.
சந்தனமர கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் இருக்கும்போது சந்தன மரங்கள் அதிகமாக வெட்டி கடத்தப்பட்டன. அவன் மறைவுக்குப்பிறகு சந்தரமரம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டது.
ஒரு சிலர் கடத்தி வந்ததையும் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.எனினும் வனத்துறையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வந்தனர். கடத்தல் காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதி கே.என்.பாளையம் வனச்சரகம் கானாகுந்தூர் பகுதியில் வனத்துறையினர். ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 5 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
அவர்கள் அந்த சந்தன கட்டைகளை கடத்தி கொண்டு சென்றது தெரியவர இந்த சந்தன கட்டைகள் அவர்களுக்கு எப்படி வந்தது? யாரிடம் வாங்கியது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளன.
சந்தனமர கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் இருக்கும்போது சந்தன மரங்கள் அதிகமாக வெட்டி கடத்தப்பட்டன. அவன் மறைவுக்குப்பிறகு சந்தரமரம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டது.
ஒரு சிலர் கடத்தி வந்ததையும் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.எனினும் வனத்துறையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வந்தனர். கடத்தல் காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதி கே.என்.பாளையம் வனச்சரகம் கானாகுந்தூர் பகுதியில் வனத்துறையினர். ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 5 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
அவர்கள் அந்த சந்தன கட்டைகளை கடத்தி கொண்டு சென்றது தெரியவர இந்த சந்தன கட்டைகள் அவர்களுக்கு எப்படி வந்தது? யாரிடம் வாங்கியது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X