search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறா பந்தயங்கள்"

    • காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது.
    • மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே உள்ள ஓகுர் மைதானத்தில் இருந்து மொத்தம் 205 புறாக்கள் பறக்க விடப்பட்டன.

    இதில் சிவகங்கை-காயல்பட்டினம் இடையிலான 160 கிலோ மீட்டர் விமான தூரத்தை காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை சேர்ந்த அகமது ரியாஸ் என்பவரது புறா 2 மணி நேரம் 2 நிமிடம் 10 வினாடியில் கடந்து வந்து முதல் இடத்தை வென்றது.

    கூடுதலாக 30 வினாடிகளில் வந்த சுலைமான் நகரை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரது புறா 2- வது இடத்தையும், அதனையடுத்து 10 வினாடி கழித்து வந்த நைனார் தெருவை சேர்ந்த முகமது ஹாஷிம் என்பவரது புறா 3-வது இடத்தையும் பிடித்தன. இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை புறா பந்தய கிளப் நிர்வாகிகள் அகமதுரியாஸ், லெப்பை, முகமது ஹாஷிம், அகமது, இப்னு மாஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.

    இவற்றில் 160 கி. மீ. சாலை தூரத்தை 1 மணி 54 நிமிட நேரத்தில் கடந்து வந்த லட்சுமி மாநகரத்தை சேர்ந்த ஜோஸ் வினின்ஸ்டன் என்பவரது புறா முதல் இடத்தை பிடித்தது. மேலும் இவரது இரு புறாக்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்தன. இதற்கான ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் நாராய ணன், ராஜ், பட்டு ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×