search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித தோமையார் ஆலயம்"

    • 9-ம் திருவிழாவையொட்டி நடக்கிறது
    • இன்று இரவு நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது.

    இந்தஆலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கொடியேற்றி வைத் தார். இந்த திருவிழா நாளை (9-ந்தேதி) வரை தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவை யொட்டி தினமும்நவநாள், திருப்பலி, அருளுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று மாலை நவநாள் திருப்பலி நடந்தது. கன்னியாகுமரி மறைவட்ட முதன்மை பணியாளர் ஜான்சன் தலைமையில் கே.எஸ்.எஸ்.எஸ். செயல் இயக்குனர் மைக்கேல் ராஜ் அருளுரை ஆற்றினார்.

    9-ம் திருவிழா வான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளி களுக்கான திருப்பலி நடந்தது. புதுக்கிராமம் பங்கு அருட்பணி யாளர் மைக்கேல் நியூமன் தலை மையில் வாவத்துறை பங்கு தந்தை லிகோரியஸ் அருளுரை ஆற்றினார்.

    இன்று மாலை 6மணிக்கு நவநாள், மாலை ஆராதனை நடக்கிறது. காரங்காடு பங்கு அருட்பணி யாளர் விக்டர் தலைமையில் கடியப்பட்ட ணம் பங்கு அருட் பணியாளர் பபி யான்ஸ் அருளுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு சப்பரப் பவனி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தேர் திருப்பலி நடக்கி றது. பெங்களூரு அருட்பணி யாளர் மரியசெல்வன் தலைமை தாங்கி அருளுரை ஆற்றுகிறார். காலை 7.30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடக்கிறது.

    ஆலஞ்சி மறை வட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமையில் நாகர்கோவில் தூய ஞான பிரகாசியர் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரை ஆற்றுகிறார். காலை 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மாலை 6மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும்நற்கருணைஆசீர் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சின்ன முட்டம் புனித தோமை யார் ஆலய பங்கு அருட்பணி யாளர் கில்டஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் அந்தோணி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவீன், துணைச் செயலாளர் மெர்லின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் மற்றும் அருட் சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

    ×