search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித சவேரியார் ஆலயம்"

    • ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார்பட்டணத்தில் புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியார் ஆலய புனிதப்படுத்துதல் விழா நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சவேரியார்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் ஆலயம் புனிதப்படுத்துதல் விழா இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    அதன்படி புனித திருக்கொடி மரம், புனிதர்களின் கெபி ஆகிய வையும் புனிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு அளிக்கப்படுகி றது. 5.30 மணிக்கு புதிய திருக்கொடி மரத்தை சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் சந்தியாகு புனிதப்படுத்தி பிரார்த்தனை செய்கிறார். 6 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை திறந்து வைத்து புனிதப்படுத்தி சிறப்பு திருப்பலி நடத்துகிறார். 8 மணிக்கு நன்றியுரையும், பாராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருப்பீடத்தை ஓரிக்கோட்டை தொழி லதிபர் அமல்ராஜ் திறந்து வைக்கிறார். புனிதர்களின் கெபியை ஆர்.எஸ்.மங்கலம் பங்கு பணியாளர் வட்டார அதிபர் தேவ சகாயம் புனிதப்படுத்துகிறார். விழா ஏற்பாடுகளை அருள் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

    • மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
    • நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி, புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினசரி திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன. விழாவின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம், இளையோர் தினம், திருமணம் ஆனவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் என்று கொண்டாடப்பட்டது.

    10- வது நாளான நேற்று காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் செல்வம், சேர்ந்தபூமங்கலம் பங்குதந்தை செல்வன், அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பரபவனி தொடங்கியது.

    நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், மடத்துவிளை ஊர்நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். சப்பரபவனி மெயின் பஜார் வழியாக சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்றது. அங்கு சிறப்பு வழிபாடு முடிந்தபின் மீண்டும் சப்பரபவனி தொடங்கி புனித சவேரியார் ஆலயம் வந்தடைந்தது.

    நிறைவு நிகழ்ச்சியாக இன்று காலையில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மதியம் அசனம் நடந்தது.

    விழாவிற்கான ஏற்பாடு களை மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர், ஆறுமுகநேரி பரதர் சமுதாய கமிட்டி தலைவர் செல்வி உள்பட பலர் செய்திருந்தனர்.

    • கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
    • நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மடத்து விளை புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.

    ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், சிங்கித்துறை பங்குத்தந்தை ஷிபாகரன், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துவிளை ஊர் நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2- வது நாளான புனித வின்சென்ட் தே பவுல் மற்றும் மரியாவின் சேனையாளர்கள் சார்பில் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

    தொடர்ந்து பத்து நாள் திருவிழாவில் இளையோர் தினம், திருமணமானவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அலாசியஸ் அடிகளார் மற்றும் மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    ×