search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித அகுஸ்தினார் ஆலயம்"

    • புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.
    • 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.

    திருவட்டார் :

    குலசேகரத்தில் புகழ்பெற்ற புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. புத்தன்கடை வட்டார முதன்மை பணியாளர் பென்னிலுக்காஸ் தலைமை தாங்கினார்.

    குழித்துறை மறை மாவட்ட செயலாளர் பேரருட்பணி ரசல்ராஜ், ஆலய பங்குதந்தை ஜோன்ஸ்கிளீட்டஸ், இணை பங்கு தந்தை சகாஜோபின், பங்கு பேரவை துணை தலைவர் ஜான்சன், செயலாளர் மேரி டெலரோஸ், பொருளாளர் மகேஷ், துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 10 நாட்கள் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவில் புனித அகுஸ்தினார் ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.

    இந்த தேர் பவனியானது இன்று மாலையில் கோவிலில் இருந்து தொடங்கி உண்ணியூர், கோணம், ஆணைக்கட்டி வழியாக கான்வென்ட் பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து கோவிலின் பின்புறம் வழியாக அண்ணாநகர், அரசுமூடு, காண்வெண்ட் வந்து கோவில் சன்னதியில் நிறைவடையும். நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவிலில் வைத்து ஜாதி, மத பேதமன்றி அனைவருக்கும் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
    • 8-ம் நாள் திருவிழாவன்று இரவில் புனித அகுஸ்தினார் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கும், தொடர்ந்து நடைபெறும் திருபலிக்கும் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    2- ம் நாள் திருவிழாவான நாளை ( 27 - ந் தேதி) மாலையில் சூசையன் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், மனோஜ் மற்றும் பல்லோட்டின் சபை குருக்கள் மறையுரை யாற்றுகின்றனர். இத்திருப்பலியில் திரு முழுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3- ம் நாள் திருவிழாவான நாளை மறுநாள் ( 28 - ந் தேதி) காலையில் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசு ரெத்தினம் தலைமையில் நடைபெறும் திருப்பலிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் சேவியர் பெனடிக்ட் மறையுரையாற்றுகிறார். இத்திருப்பலியில் முதல் திருவிருந்து வழங்கப்படுகிறது.

    4 -ம் நாள் திருவிழா வான வருகிற 29- ந் தேதி மாலையில் புத்தன்கடை மறைவட்டார முதல்வர் பென்னி லூக்காஸ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் திரித்துவபுரம் வட்டார முதல்வர் புஷ்பராஜ் மறையுரையாற்றுகிறார். 5- ம் நாள் விழாவான 30 - ந் தேதி மாலையில், தும்பாலி ஜெரி தலைமையில் நடைபெறும் திருப்பலியில் தமிழ்நாடு மாகாண தலைவர் ஜாண் சர்ச்சில் பாஸ் மறையுரையாற்றுகிறார்.

    6- ம் நாள் திருவிழாவான 31-ந் தேதி மாலையில் சேவியர் லாரன்ஸ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் மயிலாடி சைமன் மறையுரையாற்றுகிறார். 7- ம் நாள் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந் தேதி முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், வெட்டுவெந்தி மரிய மார்டின் மறையுரை யாற்றுகிறார்.

    8-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலையில் நடைபெறும் பணிக்குழுக்களின் இயக்குனர் ஜெலஸ்டின் ஜெரால்டு தலைமையில் நடைபெறும் திருப்பலிக்கு கொல்வேல் ஒய்ஸ்லின் சேவியர் மறையுரையாற்றுகிறார். இரவில் புனித அகுஸ்தினார் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    9- ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி கூட்டாண்மை பள்ளிகளின் இயக்குனர் கலிஸ்டஸ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், குலசை பெலிக்ஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா நிறைவு நாளான 4- ந் தேதி காலையில் குழித்துறை மறைமாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், கோட்டார் பணிக்குழு இயக்குனர் எட்வின் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவுக்கான ஏற்பாடு களை ஜோண்ஸ் கிளீட்டஸ் தலைமையில் சேவியர் ஆரோக்கியசாமி மற்றும் பங்கு அருட்பணி பேரவை, ஐ.சி.எம். அருள் சகோதரிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    ×