search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தனாறு கால்வாய்"

    • தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடி வரும்போது பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்தபடி வந்தன
    • கொட்டரம் பகுதியில் புத்தனாறு கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்றது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்த னாறு கால்வாய் எனப்படும் என்.பி.கால்வாய் இந்த ஆண்டு தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து போய் கிடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப் பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் அகற்றப்படாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையிலும் பராமரிக்கப்படாமல் கிடந்தது.

    இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் 20 நாட்களுக்கு பிறகு தான் கொட்டாரம் பகுதியில் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதுவும் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தூர்வாரப்படாததால் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடி வரும்போது பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்தபடி வந்தன. இதனால் ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு நின்றன. மேலும் கொட்டாரம் கடைவரம்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சரியாக வந்து சேர வில்லை. இதனால் கொட்டாரம் பகுதியில் முதல் போக கன்னிப்பூ சாகுபடி பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதைத்தொடர்ந்து கொட்டாரம் பகுதியில் உள்ள நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் அடைபட்டு நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர பொதுப் பணித்துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உட்பட அனைத்து விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பயனாக கொட்டரம் பகுதியில் புத்தனாறு கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணி நடைபெறு வதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக புத்தனாறு கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கொட்டாரம் பகுதியில் உள்ள கடை வரம்பு நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிய நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்த உள்ளனர்.

    • பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக திறக்கப்படுகிறது
    • தூர்வாரப்படாததால் கழிவுகள் தேங்கி தண்ணீர் கடைவரம்பு பகுதிகளுக்கு செல்ல முடியாத அவலம்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பபூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன.

    குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் இந்த ஆண்டு தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து போய் கிடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் அகற்றப்படாமலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையிலும் பராமரிக்கப்படாமல் கிடந்தது.

    இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த 1-ந் தேதி கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் 20 நாட்களுக்கு பிறகு நேற்று தான் கொட்டாரம் பகுதியில் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதுவும் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தூர்வாரப்படாததால் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடி வரும்போது பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்தபடி வந்தன. இதனால் ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாமல் தடைப்பட்டு நிற்கின்றன. மேலும் கொட்டாரம் கடைவரம்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சரியாக வந்து சேரவில்லை.

    இதனால் கொட்டாரம் பகுதியில் முதல் போக கன்னிப்பூ சாகுபடி பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே கொட்டாரம் பகுதியில் உள்ள நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் அடைபட்டு நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்றி கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×