search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தக கண்காட்சி"

    • அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்தி வாசிப்பாளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், இளைஞர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன் பெறும் வகையில் புத்தக கண்காட்சி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கி 22-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் அனைவரும் வரவேற்றார். ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு நூல் அரங்கங்கள், மிகச் சிறந்த அரியவகை நூல் தொகுப்புகள், ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி, நூல்கள் வாங்குபவர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி அளவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற பேச்சாள ர்களின் நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தி னர்களின் கருத்தரங்குகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டிகள், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்க ரமணன், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, வடிவேல், கலைக்குமார், நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், பேரூர் தலை வர்கள், தென்கடப்ப ந்தாங்கல் ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, கல்லூரி முதல்வர் பூங்குழலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகரமன்ற துணை தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார்.

    • புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
    • புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூடல் மாமதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 3-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

    தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.

    தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்களும் நடைபெற உள்ளன. வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் இந்த புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.
    • இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.

    மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், ஊரர்டசி ஒன்றியக்குழு துணை தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் இணைந்து புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தனர்.

    மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை மேலாளர் பண்டரி நாதன்சி, கிளை நூலகர் பச்சையம்மாள் சந்திர சேகர், முத்துச்சாமி, முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    • 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
    • ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து ஓசூரில் புத்தக கண்காட்சியை நடத்துகின்றன.

    ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் வளாகத்தில், வருகிற 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்களும், அறிவியல் இயக்க மற்றும் புத்தக கண்காட்சி பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.

    ×