search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை வாலிபருக்கு போக்சோ"

    • புதுவையில் உள்ள இன்ஸ்டியூட்டில் கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர் படித்து வந்தார்.
    • பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் கரையாம்புத்தூர் நேரு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 19). இவர் புதுவையில் உள்ள இன்ஸ்டியூட்டில் கம்ப்யூ ட்ர் கிராபிக் டிசைனர் படிப்பு வருகிறார். இவர் பண்ருட்டி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மாணவியின் சொந்த ஊருக்கு கிருஷ்ணா வந்துள்ளார். மாணவிக்கு போன் செய்து அக்கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு வரவழைத்து, ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதில் பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளனர். இதற்கு கிருஷ்ணா மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிளஸ்-2 மாணவி அவரது பெற்றோருடன் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாகிய கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கிருஷ்ணா மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×