search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண் மாயம்"

    • தந்தை வீட்டில் இருந்த புதுப்பெண் மாயமானார்
    • ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள செட்டியாபட்டி தெற்கு தெருவைச்சேர்ந்த செல்லத்துரை மகள் அபிநயா (வயது 21) இவருக்கும் ஆதனக்கோ ட்டை அம்பேத்கர் நகரைச்சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அபிநயா அவரது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால்,

    செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அழகம்மை (பொ) மற்றும் சப் இ ன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அபிநயாவை யாராவது கடத்தி இருப்பார்களா? அல்லது வேறு எங்கும் சென்றிருப்பாரா என தேடிவருகின்றனர்.

    ×