search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BRIDE IS MISSING"

    • திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயமானார்.
    • 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    அரியலூர்

    காரைக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மகன் பால்ராஜ்(வயது 30). இவருக்கும், ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரையின் மகள் கஸ்தூரிக்கும்(21) கடந்த மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்கள் காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். ேநற்று முன்தினம் இரவு திடீரென கஸ்தூரி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தந்தை வீட்டில் இருந்த புதுப்பெண் மாயமானார்
    • ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள செட்டியாபட்டி தெற்கு தெருவைச்சேர்ந்த செல்லத்துரை மகள் அபிநயா (வயது 21) இவருக்கும் ஆதனக்கோ ட்டை அம்பேத்கர் நகரைச்சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அபிநயா அவரது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால்,

    செம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அழகம்மை (பொ) மற்றும் சப் இ ன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அபிநயாவை யாராவது கடத்தி இருப்பார்களா? அல்லது வேறு எங்கும் சென்றிருப்பாரா என தேடிவருகின்றனர்.

    ×