search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி"

    • பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • மின்தடை ஏற்பட்டதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலைக்குண்டு, மயிலாடு ம்பாறை ஒன்றியத்து க்குட்பட்ட கடமலை, மயிலை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்க ளில் வாழை, தென்னை, பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலங்களுக்கு வருசநாடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. இந்த டிரா ன்ஸ்பார்மர் பழமையானது என்பதாலும் அதிகப்படி யான வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் திறன் இல்லாமல் இருந்தது.

    எனவே புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி வருச நாடு பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்க ப்பட்டது. இதனால் மின் வினியோகம் தடை பட்டது.

    எனவே வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர். கடந்த காலங்களில் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் வயலில் ஈரப்பதம் தங்கி இருக்கும்.

    தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்ப தால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய உடன் வறண்டு விடுகிறது. இதன் காரணமாக பயிர்கள் காய்ந்து காணப்படு கிறது. மேலும் சில நாட்கள் இதே நிலை தொடர்ந்தால் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ள ப்படும். டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நிறை வடைந்து பயன்பாட்டுக்கு வந்தால்தான் மின் வினியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இப்பணி நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். மின் வாரிய அதிகாரிகள் வந்து பணியை பார்வையிட்டு சோதனை அடிப்படையில் இயக்கிய பிறகுதான் மின் வினியோகம் கொடுக்க ப்படும். இதனால் பயிர்கள் முற்றிலும் சேதடையும் என தெரிவித்துள்ளனர்.

    எனவே பணியை விரைந்து முடித்து பயி ர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×