search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த தின விழா"

    • அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.
    • சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலாளர் மகாதேவன், அவைத்தலைவர் மகேந்திரன் மாவட்ட பேரவை செயலாளர் முனியசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வெள்ளத்துரை வழங்கினார். இதில் ஒன்றிய மாணவர் அணி காளிமுத்து, ஊராட்சி செயலாளர்கள் நல்லமருது, பெருமாள், முனியசாமி, பேரவை துணைச் செயலாளர் கருப்பசாமி, கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

    சாயல்குடியில் அ.ம.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பச்சைக்கண்ணு தலைமை வகித்தார். நகர செயலாளர் சரிபு, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர்ஜெசிமா பானு, தொண்டர் அணி ராமசாமி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் .அ.ம.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் கடலாடி தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பாப்பாகுளம் பூமிநாதன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ×