search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரத்யேக பிராண்ட்கள்"

    • பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.[
    • பசுமை சார் உற்பத்தி விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகிறது.

    திருப்பூர்:

    மத்திய ஜவுளித்துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா, இயக்குனர் அனில்குமார், துணை செயலர் பிரசாந்த்குமார் மீனா ஆகியோர் திருப்பூர் வந்திருந்தனர். ஏற்றுமதியாளர்களை சந்தித்து, பாரத் டெக்ஸ் - 2024 கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

    திருப்பூர் கே.எம்., நிட்வேர் யூனிட்டுக்கு சென்ற குழுவினர், பின்னலாடை உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், பொது செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபால கிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோரை சந்தித்து தொழில் நிலவரம் குறித்து பேசினர்.

    சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில், திருப்பூர் தொழில் குழுமம் மட்டுமே வர்த்தகர்களின் பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. ஒட்டுமொத்தமாக, பைபர் துவங்கி, முழுமை பெற்ற ஆடையாக உற்பத்தி செய்வது வரையில், அனைத்து தொழில்நுட்பங்களிலும் வளம் குன்றா வளர்ச்சி நிலையை பின்பற்றி முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

    ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், உலக நாடுகள் மத்தியில், பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.

    திருப்பூர் தொழில் நகரம், 15 ஆண்டுகளாக, பசுமை சார் உற்பத்தியை வெற்றிகரமாக செய்து வருகிறது. ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்ப சுத்திகரிப்பு, காற்றாலை மின் உற்பத்தி, சோலார் உற்பத்தி என பசுமை சார் உற்பத்தியில் திருப்பூர் முன்னோடியாக விளங்குகிறது என்றார்.

    ஜவுளித்துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா பேசியதாவது:-

    தற்போதைய இந்திய ஜவுளி வர்த்தகத்தில், 2024ல் நடக்கும், பாரத் டெக்ஸ் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் அறிய வேண்டும். ஏற்றுமதியாளர், கட்டாயம் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

    திருப்பூர் கிளஸ்டர், வளம் குன்றா வளர்ச்சி என்ற பசுமை சார் உற்பத்தி விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருகிறது. புகழ்பெற்ற திருப்பூர் தொழில் நகரம், மற்ற பிராண்ட் நிறுவனங்களுக்காக, பின்னலாடை உற்பத்தி செய்வதற்கு பதிலாக, திருப்பூருக்கென பிரத்யேக பிராண்ட்களை கட்டமைக்க திட்டமிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். 

    ×