search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதான கால்வாய்"

    • பிரதான கால்வாய்களில் ரூ.28.80 கோடியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது
    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் புனர மைப்பு பணிகள் மற்றும் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயரச்செய்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், துரிதமாக பல்வேறு நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கண்மாய்கள் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மானாமதுரை , திருப்புவனம் வட்டங்களில் பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் வைகை யாற்றின் குறுக்கே விரகனூர் மதகணையில் இருந்து பிரியும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் மொத்தம் ரூ.28.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இதன்மூலம் மானா மதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் உள்ள 40,743.00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன் 82 கண்மாய்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. மேலும், இந்த பகுதியைச் சுற்றியுள்ள 3,180 ஏக்கர் இடைவெளி நிலங்களும் பயன்பெறும்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மானாமதுரை கிராமம் கீழப்பசலை மற்றும் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை சிவகங்கை சாலை இணைப்பு பாலத்திற்கு மேல்புறத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு ரூ.16.86 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த அணைக்கட்டின் மூலம் கீழப்பசலை மேலப்பசலை ஆதனூர் மற்றும் சங்கமங்கலம் ஆகிய 4 கண்மாய்கள் வழியாக 461.82 எக்டேர் (1140.70 ஏக்கர்) பாசன நிலங்களும், கால்பிரிவு மற்றும் செய்களத்தூர் கிராமங்களில் உள்ள 27 விவசாய கிணறுகள் வழியாக 85.75 எக்டேர் (211.80 ஏக்கர்) பாசன நிலங்களும் பயன்பெறு கின்றன. மொத்தமாக 547.57 எக்டேர் (1352.50 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.

    இந்த அணைக்கட்டு மூலம் 9.36 மி.க.அடி (எம்.சி.எப்.டி) தண்ணீர் தேக்க இயலும். இதன் பொருட்டு அணைக்கட்டின் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். இதனால் பாசன வசதி பெற்று விவசாயிகளின் பொருளாதார வாழ்க்கை தரம் மேம்படுவதோடு மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ள காலங்களில் வைகை யாற்றில் இருந்து உபரிவெள்ள நீரை மேலப்பசலை கண்மாய் வழியாக நாட்டார் கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 16 கண்மாய்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 கண்மாய்களுக்கும் ராமநா தபுரம் மாவட்டத்திலுள்ள 4 கண்மாய்களுக்கு இந்த அணைக்கட்டு மூலம் திருப்பிவிட இயலும்.

    இந்த 10 கண்மாய்கள் மூலம் சுமார் 614.30 எக்டேர் (1517.32 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், இளம்பொறியாளர் போஸ், உதவிப்பொறியாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×