search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமருக்கு கடிதம்"

    • நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • பிரதமருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    விருதுநகர்

    நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் ஒரு நிறுவனம் வெளியிட்ட தகவல் தொடர்பானது மிகுந்த கவலையளிப் பதாக உள்ளது. அவர்களின் அறிக்கையின் படி ஆதார் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் உட்பட்ட 8.15 மில்லியன் இந்திய குடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடையாளம் காணக்கூடிய இணையத் ளத்தில் விற்கப்படுகிறது.

    நமது குடிமக்களின் முக்கியமான தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த தரவு வெறும் 80 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனைக்கு வழங்கப்படு கிறது. இது தனி உரிமை யின் கடுமை யான மீறல் மட் டுமல்ல. தேசிய பாதுகாப்பு விஷய மும் கூட. இன்னும் குழப்ப மான விஷயம் என்ன வென்றால் தரவு செல்லுபடி யாகும் என்று தோன்றுகிறது. இது தரவு பாதுகாப்பு நடவ டிக்கைகளில் குறிப்பிடத்தக்க குறைப்பாட்டை குறிக்கிறது.

    எதிர்காலத்தில் இது போன்ற மீறல்களை தடுக்க அனைத்து அரசமைப்புகள் மற்றும் அமைப்புகளில் இணைய பாதுகாப்பு உட்கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து மேம்படுத்து மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வும் பாதுகாக்கப்பட்ட தாகவும் இருக்க உறுதி அளிக்க வேண்டும். எனவே டிஜிட் டல் மய மாக்கல் மற்றும் இணைய அச்சு றுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் நமது தரவு மற்றும் தனி உரிமை பாதுகாப்பதில் அரசு ஒரு முறையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்.

    இந்த சூழலை சரி செய்வ தற்கும் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்ப டுத்துவதற்கு நடவடிக்கை கள் பற்றி அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதேபோல் மற்றொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் சந்திப்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவை கணினி மயமாக்கிய ராஜீவ் காந்தியின் சிலை அமைக் கப்பட்டு இருந்தது. இந்த சிலை அந்த பகுதி மக்களுக்கும், குறிப்பாக காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களுக்கும் உத்வேகத்தையும், நாட்டுப்பற்றையும் தந்து கொண்டிருந்தது.

    ராஜீவ் காந்தியின் சிலையை யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதனால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×