search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manikam Thakur MP"

    • நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • பிரதமருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    விருதுநகர்

    நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் ஒரு நிறுவனம் வெளியிட்ட தகவல் தொடர்பானது மிகுந்த கவலையளிப் பதாக உள்ளது. அவர்களின் அறிக்கையின் படி ஆதார் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் உட்பட்ட 8.15 மில்லியன் இந்திய குடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அடையாளம் காணக்கூடிய இணையத் ளத்தில் விற்கப்படுகிறது.

    நமது குடிமக்களின் முக்கியமான தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த தரவு வெறும் 80 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனைக்கு வழங்கப்படு கிறது. இது தனி உரிமை யின் கடுமை யான மீறல் மட் டுமல்ல. தேசிய பாதுகாப்பு விஷய மும் கூட. இன்னும் குழப்ப மான விஷயம் என்ன வென்றால் தரவு செல்லுபடி யாகும் என்று தோன்றுகிறது. இது தரவு பாதுகாப்பு நடவ டிக்கைகளில் குறிப்பிடத்தக்க குறைப்பாட்டை குறிக்கிறது.

    எதிர்காலத்தில் இது போன்ற மீறல்களை தடுக்க அனைத்து அரசமைப்புகள் மற்றும் அமைப்புகளில் இணைய பாதுகாப்பு உட்கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து மேம்படுத்து மாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வும் பாதுகாக்கப்பட்ட தாகவும் இருக்க உறுதி அளிக்க வேண்டும். எனவே டிஜிட் டல் மய மாக்கல் மற்றும் இணைய அச்சு றுத்தல்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் நமது தரவு மற்றும் தனி உரிமை பாதுகாப்பதில் அரசு ஒரு முறையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்.

    இந்த சூழலை சரி செய்வ தற்கும் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்ப டுத்துவதற்கு நடவடிக்கை கள் பற்றி அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இதேபோல் மற்றொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் சந்திப்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவை கணினி மயமாக்கிய ராஜீவ் காந்தியின் சிலை அமைக் கப்பட்டு இருந்தது. இந்த சிலை அந்த பகுதி மக்களுக்கும், குறிப்பாக காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களுக்கும் உத்வேகத்தையும், நாட்டுப்பற்றையும் தந்து கொண்டிருந்தது.

    ராஜீவ் காந்தியின் சிலையை யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதனால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மணிப்பூர் சம்பவம் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மோடி, அமித்ஷா தயாராக இல்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • அமித்ஷா முதல் நாள் போபால் செல்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூர் பாதிப்பை கண்டறிய பிரதமர் மோடி நேரில் செல்லாத நிலையில் ராகுல்காந்தி அங்கு சென்று மக்களை சந்தித்ததுடன் கவர்னரையும் சந்தித்துள்ளார். பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்சினையை பற்றி நாடாளுமன்றத்துக்கு வெளியே 85 நாட்கள் கழித்து பேச தொடங்கி 80 வினாடிகள் பேசியுள்ளார்.

    மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்றுள்ளனர். இதில் தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் உள்பட 21 பேர் சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ இதற்கு பதிலளிக்க தயாராக இல்லை.

    அமித்ஷா முதல் நாள் போபால் சொல்கிறார். மறுநாள் ராமேசுவரம் வருகிறார். மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பிரதமர் இந்தியா கூட்டணி என்ற பெயர் நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் பெரும் தாக்கத்தை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் பதிலளித்ததோடு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய அனைத்து கட்சி குழுவினரை காஷ்மீர் அழைத்துச் சென்றார்.

    ஆனால் பிரதமர் மோடி யின் செயல்பாடு மாறுபாடாக உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் தமிழகத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்திற்கு வரும் வடமாநில தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அமித்ஷா இந்தியில் தான் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பால கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழாவில் காமராஜர் விருது வழங்குவதற்கு சேவையாற்றிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 40 பேருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கதர் ஆடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து கூறினார்.
    • விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுகந்தி 2023-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நைட்டிங்கேல் விருது பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளதாவது:-

    மருத்துவசேவையில் முழு அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றியமைக்காக விருது பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். குறிப்பாக பழங்குடியின தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்க்க செய்து, இறப்பு இல்லாத நிலைக்கு சாதனை புரிந்து பெருமை சேர்த்து உள்ளீர்கள். தங்கள் சேவை இன்னும் உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது. இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் என்றுமே பா.ஜ.க. வளராது என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை யேற்றத்தால் பா.ஜ.க. மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா, தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

    காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன், பணியாளர் நலன் தெற்கு மாவட்ட தலைவர் பொன்.மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் 7 அரை கோடி பேருக்கு வங்கி கணக்கை தொடங்கி வைத்தது. ஆனால் தற்போது அந்த வங்கி கணக்கு மூலம் ஏழைகளிடம் குறைந்தபட்சம் பணம் இல்லை எனக்கூறி வங்கிகள் பணத்தை பிடுங்கி வருகின்றது.

    காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய சீமானை வன்மையாக கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 7 பேரின் விடுதலை சட்ட விரோதமானது.

    தமிழகத்தில் பா.ஜ.க. வில் ரவுடிகளும், மோசடி பேர்வழிகளும் இணைந்துள்ளனர். இதைப்பார்த்து அமைச்சர் பா.ஜ.க. அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என கூறியிருக்கலாம். பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் மனதில் என்றுமே இடமில்லை. தமிழக மண் எப்போதும் பா.ஜ.க.விற்கு எதிரானது. அவர்கள் இங்கு என்றுமே வளர முடியாது. பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை யேற்றத்தால் பா.ஜ.க. மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், காசிநாதன், கார்த்திக், வினோத் ராஜா, சவுந்தரபாண்டியன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×