search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மோடி, அமித்ஷா தயாராக இல்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி.
    X

    நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மோடி, அமித்ஷா தயாராக இல்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி.

    • மணிப்பூர் சம்பவம் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மோடி, அமித்ஷா தயாராக இல்லை என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • அமித்ஷா முதல் நாள் போபால் செல்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூர் பாதிப்பை கண்டறிய பிரதமர் மோடி நேரில் செல்லாத நிலையில் ராகுல்காந்தி அங்கு சென்று மக்களை சந்தித்ததுடன் கவர்னரையும் சந்தித்துள்ளார். பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்சினையை பற்றி நாடாளுமன்றத்துக்கு வெளியே 85 நாட்கள் கழித்து பேச தொடங்கி 80 வினாடிகள் பேசியுள்ளார்.

    மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்றுள்ளனர். இதில் தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, திருமாவளவன், ரவிக்குமார் உள்பட 21 பேர் சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ இதற்கு பதிலளிக்க தயாராக இல்லை.

    அமித்ஷா முதல் நாள் போபால் சொல்கிறார். மறுநாள் ராமேசுவரம் வருகிறார். மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பிரதமர் இந்தியா கூட்டணி என்ற பெயர் நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் பெரும் தாக்கத்தை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் பதிலளித்ததோடு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய அனைத்து கட்சி குழுவினரை காஷ்மீர் அழைத்துச் சென்றார்.

    ஆனால் பிரதமர் மோடி யின் செயல்பாடு மாறுபாடாக உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் தமிழகத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்திற்கு வரும் வடமாநில தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அமித்ஷா இந்தியில் தான் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர் பால கிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், கிருஷ்ணமூர்த்தி, மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர். முன்னதாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழாவில் காமராஜர் விருது வழங்குவதற்கு சேவையாற்றிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட 40 பேருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கதர் ஆடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×