search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில்"

    • இன்று இரவு அங்குரார்பணம் நடக்கிறது.
    • நாளை திருவீதி உற்சவம் நடைபெறும்.

    பிரசன்ன வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நாளை (வியாழக்கிழமை) புஷ்பயாகம் நடைபெறுகிறது. இதற்காக இன்று (புதன்கிழமை) இரவு அங்குரார்பணம் நடக்கிறது.

    இந்த கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் மே மாதம் 31-ந் தேதி முதல் ஜூன் மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த உற்சவத்தின்போது ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

    வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேஸ்வரருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் 2.40 மணி முதல் 5 மணி வரை புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.

    இதில் பல்வேறு வகையான மலர்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அதன்பின் திருவீதி உற்சவம் நடைபெறும்.

    ×