search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிச்சி"

    • தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை
    • இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

    ஆரல்வாய்மொழி :

    தோவாளை பூ மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தோவாளை, செண்பக ராமன் புதூர் பகுதிகளில் இருந்து கேந்திபூக்களும் நெல்லை மாவட்டம் பழவூர் உள்பட பல்வேறு பகுதிக ளில் இருந்து பிச்சி, மல்லிகை பூக்களும் அதி களவு விற்பனைக்கு வருகி றது.

    மேலும் பெங்களூர், ஓசூர், சேலம், சத்தியமங்கலம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி இன்று பூக்கள் அதிகளவு விற்பனைக்கு வந்திருந்தது. பூக்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்திருந்தனர்.

    இதனால் தோவாளை பூ மார்க்கெட் களை கட்டியி ருந்தது. சில்லறை வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகள் வரை பலரும் பூக்களை வாங்கி சென்றனர். இதனால் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை, பிச்சி பூக்களின் விலை வழக்கத்தை விட 2 மடங்கு உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை யானது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தாமரை பூக்கள் விற்பனைக்கு குறைவாக வந்திருந்தது. இதனால் தாமரை பூவின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. தாமரை பூ ஒன்று ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி ரூ.200, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.100, மஞ்சள்செவந்தி ரூ.170, வெள்ளை செவந்தி ரூ.200, அரளி ரூ.290-க்கு விற்பனை யானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு ஆயுத பூஜையையொட்டி ஏராள மான வியாபாரி களும், பொதுமக்களும் பூக்கள் வாங்க வந்திருந்த தால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த மாதம் திருமண விழாக்களும் அதிக அளவு இருப்பதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    ×