search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்"

    • இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

    திண்டுக்கல்:

    பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஓய்வூதியர் சங்கங்களின் இணைப்புக்குழு அழைப்பின் பேரில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் படி இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    15 சதவீத பென்சன், 1.1.2017ம் ஆண்டு முதல் வழங்கிட வேண்டும். பென்சன் மாற்றம், சம்பள மாற்றத்துடன் இணைப்பு செய்து கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். தொலைத்தொடர்பு துறையின் அதிகார தளத்தை களைந்திட வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கிளை துணைத் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் ஜான்போர்ஜியா, கிளைச்செயலாளர் ஜோதிநாதன், பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைத்தலைவர் அய்யனார்சாமி, கிளைத்துணை ச்செயலாளர்கள் வைத்திலிங்க பூபதி, கிறிஸ்டோபர், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.

    ×