என் மலர்
நீங்கள் தேடியது "Pensioners protest"
- அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு மறுத்து வருகிறது.
- அரசு காலம் தாழ்த்துவதாக ஓய்வூதியதாரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை:
தமிழக போக்குவரத்து கழகங்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட போதும் ஓய்வூதியதாரர்களுக்கு அந்த பலன் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போதும் அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு மறுத்து வருகிறது.
இது தொடர்பான வழக்குகளில் அகவிலைப்பபடி உயர்வு வழங்க கோர்ட்டு உத்தர விட்ட போதும், அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துவதாக ஓய்வூதியதாரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கர்சன் கூறியதாவது:-
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப் ்பட்டுள்ளது. ஆனாலும் அரசு தொடர்ந்து மேல் முறையீடு செய்கிறது.
இதனால் எங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. இதுவரை நாங்கள் ரூ.3 லட்சத்துக்கும் மேல் இழந்துள்ளோம். மின் வாரியத்திலும் இதே நிலை நீடிக்கிறது.
நாங்கள் அரசின் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடி உள்ளோம். அரசு அறக்கட்டளை மூலமாகவே ஓய்வூதியம் வழங்குவோம் என்று கூறுகின்றனர். ஆனால் ஓய்வூதியத்தை அரசு பொறுப்பேற்று வழங்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இது குறித்து எங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்ய நாளை மறுநாள் (22-ந்தேதி) சென்னையில் மைய குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்ப படையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளைத் தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார்.
கருப்பையா புஷ்பம், சிவயோகம், ராம சீனிவாசன், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் சி.ஐ.டி.யு. நகர கன்வீனர் வீர சதானந்தம் போன்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் சரசுவதி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.
திண்டுக்கல்:
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஓய்வூதியர் சங்கங்களின் இணைப்புக்குழு அழைப்பின் பேரில் 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் படி இன்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட கருப்பு அட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 சதவீத பென்சன், 1.1.2017ம் ஆண்டு முதல் வழங்கிட வேண்டும். பென்சன் மாற்றம், சம்பள மாற்றத்துடன் இணைப்பு செய்து கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். தொலைத்தொடர்பு துறையின் அதிகார தளத்தை களைந்திட வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க கிளை துணைத் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் ஜான்போர்ஜியா, கிளைச்செயலாளர் ஜோதிநாதன், பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைத்தலைவர் அய்யனார்சாமி, கிளைத்துணை ச்செயலாளர்கள் வைத்திலிங்க பூபதி, கிறிஸ்டோபர், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.