search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவாணர் மணிமண்டபம்"

    • பாவாணர் மணிமண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக பொருத்த வேண்டும்.
    • தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ் மொழிக்காகவே வாழ்ந்து மறைந்து இன்றும் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தவர் சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழிவித் தகர் போன்று போன்ற பல்வேறு பெருமைகளுக்கு உரியவர் தமிழ்தேசியத்தந்தை "மொழி ஞாயிறு" தேவநயப் பாவாணர்.

    அவரை பெருமைப்ப டுத்தும் விதமாக திருவுரு வச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் மதுரை சாத்த மங்கலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி மணிமண்ட பத்தை திறந்து வைத்து, பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணம் என்பவருக்கு மணிமண்டப பொருப்பாளராக அரசு பணி நியமன ஆணை வழங்கினார். பரிபூரணம் உயிருடன் இருக்கும் வரை மணிமண்டபத்தை சிறப்பாக பராமரித்து அங்கு வரும் தமிழ் ஆர்வ லர்களுக்கு தனது தாத்தா தேவநேயப்பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறி வந்தார்.இந்த நிலையில் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் பணிக்காலம் முடிவடையும் முன்னரே பரிபூரணம் உயிரி ழந்தார். இந்த நிலையில் மணிமண் டபத்திற்கு வரும் தமிழ் ஆர்வலர்கள் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்க நிலையான பொறுப்பாளர் நியமிக் கப்படாமல் உள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் பாவா ணரின் வரலாற்றை தெரிந்து கொள்ளமுடியால் சென்று விடுகின்றனர். மேலும் மணிமண்டபத்தை பார்வையிட வரும் ஆண்-பெண்களுக்கு தனித்தனியே கழிவறை வசதி இல்லை. இருபாலரும் ஒரே கழி வறையை பயன்படுத்தும் நிலையும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    மணிமண்டப வளாகத் திற்குள் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இயங்கா மல் இருப்பதால் சமூக விரோத செயல்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது. இத னால் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், காவ லாளியை நியமிக்க வேண் டும், திறந்த வெளியில் உள்ள மின்சார பெட்டி உள்ளது.

    அதற்கு பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தர வேண்டும், வர்ணம் பூசி மணிமண்டபத்தை புதுப்பொலிவாக்கிட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாவாணரின் புகழை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    ×