search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதிய மஸ்தூர் சங்கம்"

    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொழிலாளர்க ளுக்கு எதிரானது.
    • கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர்.

    திருப்பூர் :

    பாரதிய மஸ்தூர் சங்கத்தின்தென்பாரத அமைப்பு செயலாளர் எஸ். துரைராஜ் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2023 ஏப்ரல் 21 ந் தேதி அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொழி லாளர்க ளுக்கு எதிரானது. இத்திருத்த த்திற்காகவெளி நடப்பு செய்த எதிர்க் கட்சிக ளின்நடவடிக்கை வெறும் நாடகம் மட்டும்தான். தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 65 A-ல் திருத்தம்கா ரணமாக 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். எந்த வொரு தொழி ற்சாலை அல்லது நிறு வனம் விரும்பி னால் இதை நடைமுறை படுத்த முடியும் .12 மணி நேரம் வேலை செய்ய சொன்னால் தொழிலா ளர்களால் மறுக்க இயலாது. அதிலும் குறிப்பாக பெரும்பான்மை யான வர்கள் ஒப்பந்த அடிப்ப டையில் தான் நியமிக்கப்ப ட்டுள்ள நிலை யில்தொழி லாளர்கள் விரும்பி னால் மட்டுமே என்பதெல்லாம் வெறும் வா ர்த்தைஜாலம் மட்டுமே. எனவே இதை பாரதிய மஸ்தூர் சங்கம்கடு மையாக எதிர்க்கிறது. இச்சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் வலியு றுத்து கிறது.இது ஒரு புறமிருக்க இச்சட்ட திருத்தத்திற்கு எதிராக வெளி நடப்பு செய்த கம்யூனிஸ்டுகள் ஆட்சிபுரியும் கேரள மாநில த்தில் பல துறைகளில் 12 மணி நேர வேலை நடைமுறை படுத்தப்ப ட்டுள்ளது. தனியார் மயம், தாராளமயம், உலக மயம், ஆகிய கொள்கை களை எதிர்ப்ப தாககூறும் கம்யுனி ஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஆளும், ஆண்ட மாநிலங்க ளில் நடைமுறைப் படுத்தி யுள்ளனர். காங்கிரஸ்க ட்சியும் அதற்கு துணை போகிறது.

    இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து நாட கம்நடத்துகின்றனர்.அல்லது பொது மக்களை ஏமாற்று கின்றனர்.கூடவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும்அனைத்து மாநிலங்க ளிலும் இச்சட்டம் அமலாகியுள்ளதுஎன்பது அப்பட்டமான பொய் என்பது மட்டுமல்ல மக்களைஏமாற்றும் கீழ்த்தரமான அரசியல் என்றார்.

    • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிட வேண்டும்
    • 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிட வேண்டும்

    கன்னியாகுமரி:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்கிடவும்‌, 14-வது ஊதிய ஒப்பந்தம் தொகையை உடனே வழங்கிடவும், 4 சதவீதம் டி.ஏ. உயர்வை வழங்கவும், நீதிமன்றம் உத்தரவு படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை வலியுறுத்தி திங்கள் நகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிளை தலைவர் மணி கண்டன் தலைமை தாங்கி னார். அமைப்பாளர் ஹரிகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னராக மாவட்ட அமைப்பா ளர் குமாரதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சி யின் மாவட்ட பொது செயலாளர் ராஜா, மணி மகேஷ்வர பிள்ளை சுவாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் விஜயன் நன்றி கூறினார்.

    ×