search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதம்"

    • பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள் என திண்டுக்கல் சீனிவாசன் பேட்டிளித்தார்.
    • இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.

    மதுரை

    பி.கே.மூக்கையா தேவரின் நினைவு நாளை யொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந் திருக்கும் அவரின் நினை விடத்தில், அ.தி.மு.க. சார் பில் மரியாதை செலுத்தப் பட்டது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற் பாட்டில் முன்னாள் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவா சன்,செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், மதுரை புற நகர் கிழக்கு மாவட்ட செய லாளர் ராஜன் செல்லப்பா, ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னர்.

    இந்த நிகழ்ச்சியில் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் எஸ்.எஸ்.சரவணன், டாக்டர் சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ராமகிருஷ்ணன், சிவசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாகி கள் தமிழ்ச்செல்வன், திருப் பதி, மதுரை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் திண்டுக்கல் சீனி வாசன் கூறியதாவது:-

    மூன்று கல்லூரியை உருவாக்கித் தந்த கல்வித் தந்தை, நாடாளுமன்ற உறுப் பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு சேவை செய்த பி.கே. முக்கையா தேவரின் 44-வது குருபூஜை முன்னி ட்டு கட்சி பொதுச் செயலா ளர், எடப்பாடி பழனிசாமி யின் ஆணைக்கிணங்க, மூக்கையா தேவரின் நினை விடத்தில் அஞ்சலி செலுத் தப்பட்டது.

    உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவர் சிலை அமைக்க, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனி சாமி சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

    மேலும் பெருங்காம நல்லூரில் கை ரேகைச் சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த, 16 தியாகிகளின் நூற் றாண்டு நாளை முன்னிட்டு, ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் நினைவு மண்டபத்தை உரு வாக்கி தந்தார்.

    புரட்சித்தலைவர் வழியி லும், புரட்சி தலைவிஅம்மா வழியிலும் எடப்பாடி பழனி சாமி பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கி னார்.

    இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தப்பு ஒன்றும் இல்லை.தி.மு.க. வை சேர்ந்த டி.ஆர். பாலுவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள். இதற்கு கூட எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • நாட்டிய கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த அபயா ம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடங்கியது.

    சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 18ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை கோவை சேலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெங்களூரு மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

    முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சியில் நிறுவனர் பரணிதரன், ஏ ஆர் சி விஸ்வநாதன், ஏ பி சி செந்தில்வேலன், நிகழ்ச்சி யின் தொகுப்பாளர் அகஸ்டின்விஜய், மற்றும் மயிலாடுதுறை முக்கிய பொறுப்பாளர்கள் அரசியல்வாதிகள் பொது மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    ×