search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகழ்ச்சிகள்"

    • புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரியை அறக்கட்டளை நிர்வாகமே செலுத்தும்.
    • விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டியும் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் விளத்தூர் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களை கவுரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.

    பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவிகளில் ஒருவரை குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அவருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த நாணயத்தை 2-ம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ என்ற மாணவி தட்டிச்சென்றார்.

    மேலும், வருகிற (2024-25) கல்வியாண்டில் விளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி கட்டணங்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்திவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்வில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்,

    விளத்தூர் நடுநிலைப்பள்ளி முதல்வர் தையல் நாயகி தலைமையிலான பள்ளி ஆசிரியர்கள், விளத்தூர் ஊராட்சி தலைவர் ஜனனி, களத்தூர் ஊராட்சி தலைவர் பிரபு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா?
    • முன்னதாக எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா ஆறாவது நாள் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர், டிவி புகழ் அகடவிகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலே என்ற தலைப்பில் அன்னலெட்சுமி, பிரபாகரன், வர்ணனி ஆகியோரும், ஆன்மீகம் பெரிதும் பெருகியது புறத்திலே என்ற தலைப்பில் டிவி புகழ் பழனி, தமிழாசிரியர் சாகுல் ஹமீது, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார்.

    எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் முனைவர் துரை ராயப்பன், ஆலோசகர் மருத்துவர் பாண்டியன், சர்வாலய உழவாரப்பணி குழுவை சேர்ந்த பாபு என்ற குமரவேல், முருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் ஊழியர் ராஜ்மோகன், நிசாந்த், அண்ணா துரை, மணி, மணிவண்ணன், குருக்கள் ஹரிஹரன், வினோத், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    வருகிற அக் 24 ஆம் தேதி வரை அணைத்து நிகழ்ச்சிகளையும் சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி விழாக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

    • இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.
    • 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜன் சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சதய நாளான 25ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

    சதய விழாவை ஒட்டி பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து விழா மேடையும் அமைக்கப்படும்.

    • பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.
    • முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தினவிழா திருத்துறைப்பூண்டி பாரதமாதா முதியோா் இல்லத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா தலைமை தாங்கினார். வக்கீல் அரசு தாயுமானவா் முன்னிலை வகித்தாா். முன்னதாக பாரதமாதா முதியோா் இல்ல நிறுவனா் எடையூா் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    தொடர்ந்து, மூத்தக்குடி மக்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்க ப்பட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவிப்பெறும் முதியோா் இல்லங்களில் இருந்து சமூக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

    பின்னர், முதியோா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களின் திறமைகளை வெளி ப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனா். முதியோா் இல்லங்களை நடத்தி வரும் நிா்வாகிகளை மாவட்ட சமூகநல அலுவலா் பாராட்டி பாிசுகள் வழங்கி சிறப்பித்தாா்.

    விழாவில் திருத்து றைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய சேவிகா, கிராம சேவிகாக்கள், வக்கீல் இன்குலாப், திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய உளவியல் ஆலோசகர் மெர்லின் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.

    பாரதமாதா முதியோா் இல்ல காப்பாளா் புனிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

    முடிவில் திருவாரூர் மாவட்ட வரதட்சணை தடுப்புக்குழு உறுப்பினா் சங்கீதா மணிமாறன் நன்றி கூறினாா்.

    • மனநலம் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
    • தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மன்னார்குடி:

    உலக மனநல தினத்தை யொட்டி மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, நேசக்கரம், திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பு லட்சுமி பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நம்பிக்கை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

    திட்ட இயக்குனர் விஜயா, மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஆசிரியர் ராஜப்பா, நேசக்கரம் ஆசிரியர் தங்கபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேசக்கரம் ஒருங்கிணை ப்பாளர்கள் கார்த்திகேயன், தீனதயாளன், நேசக்கரம் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெலிக்ஸ், எழிலரசன் மற்றும் கலை குழுவினர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தத்ரூபமாக நடித்து, அவரை எவ்வாறு வழிநட த்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தனி நபர் கழிப்பிடம் குறித்த கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • கை கழுவாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பேரூ ராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பேரூராட்சி உதவி இயக்குனர் அறிவுரைப்படி, பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் பேரூராட்சி பெருந்தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையிலும் தென்னக பண்பாட்டு கலை குழு மூலமாக பஸ் நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தனி நபர் கழிப்பிடம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது பற்றி விழிப்புணர்வு செய்ய ப்பட்டது.

    இதில் எமதர்மன் வேடம் அணிந்தும் , ஆடல் , பாடல் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மேள தாளங்கள் முழங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கை கழுவாமல் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு , குளிக்கும் போது வீணாகும் தண்ணீரை நல்ல முறையில் காய் கனி தோட்டத்திற்கு விடுதல் , பிளாஸ்டிக் பை பயன்படுத்தாமல் மீண்டும் மஞ்சப்பை பயன்படு த்துவது பற்றியும் பல்வேறு வகைகளில் ஆடல் பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. முடிவில் மதுக்கூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வை யாளர் ரவி நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பூதலூர் வட்டார கல்வி அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி பள்ளி செயல் பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார். பூதலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்பு சுப்பிரமணியன், திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடக்க த்தில் ஆசிரியர் தேசிகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் புனித செபஸ்தியார் உதவிபெறும் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளரும், பங்குதந்தையுமான காேஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.

    இணை பங்குதந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், முத்துமேரி மைக்கேல் ராஜ், பாபநாசம் பெனிபிட் பண்ட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆறுமுகம், பாபநாசம் லயன்ஸ் கிளப் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், ஆசிரியர் பயிற்றுனர் அகிலா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆபிரகாம் பாபு தொகுத்து வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை கேத்ரின் ஆலிஸ் ராணி நன்றி கூறினார்.

    • நாட்டிய கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த அபயா ம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடங்கியது.

    சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 18ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை கோவை சேலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெங்களூரு மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

    முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

    நிகழ்ச்சியில் நிறுவனர் பரணிதரன், ஏ ஆர் சி விஸ்வநாதன், ஏ பி சி செந்தில்வேலன், நிகழ்ச்சி யின் தொகுப்பாளர் அகஸ்டின்விஜய், மற்றும் மயிலாடுதுறை முக்கிய பொறுப்பாளர்கள் அரசியல்வாதிகள் பொது மக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    • வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
    • அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டரிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து சீர்காழி தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தீயணைப்பு நிலையத்திற்கு சிறிய வாகனம் மற்றும் வீடுகளில் புகும் பாம்புகளைப் பிடிக்க பாம்பு பிடி கருவி வழங்கிட வேண்டும் என நிலைய அலுவலர் ஜோதி கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று உபகரணங்கள் வாங்கிட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்பு சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    இதை குறித்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு ரூ.47 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடந்து வருவதை ஆய்வு செய்து, பணிகளை தரமாக செய்திட ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் அரசு விழாக்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்திட வருங்காலங்களில் நடத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் சீர்காழி நகராட்சியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையர் வாசுதேவன் மற்றும் நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் பழைய பஸ் நிலைய பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அப்போது மாவட்ட தி.மு.க. பிரதிநிதி அன்பழகன், ஒப்பந்ததாரர் விஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பெரிய கோவில் வளாகத்தில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கியது.
    • பல்வேறு இடங்களின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது.

    தஞ்சாவூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். காந்திஜி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது. 

    • பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல்.

    மதுக்கூர்:

    தமிழகமெங்கும் மாற்றுத்திற னாளி–களுக்கான விழிப்புணர்வு முகாம் பல்வேறு வகையில் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதனை அடுத்து தமிழக பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மாணவர்களின் மாற்றுத்திறனாளிக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகின்றது.

    இதனை அடுத்து விழிப்புணர் பேரணி, இணைவோம் மகிழ்வோம் என பல்வேறு வகையில் நடைபெற்று வந்தது.

    இதன்படி நேற்று 25-ந்தேதி மதுக்கூர் அருகே மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதன்படி பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இன்று இனிய முறையில் நடைபெற்றது.

    இந்த கலை நடன நிகழ்ச்சிக்கு மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜமீலா அவர்கள் தலைமையேற்று கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் வீரப்ப ராஜா, பிரகாஷ் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்கள் இருதயராஜ், புஷ்பா மற்றும் இயன் முறை மருத்துவர் பழனிவேல் ஆகியோர் இதற்கு ஆன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலும் விளையாட்டுப் போட்டிகள் சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது.

    ×