search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மனநல தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.

    அரசு பள்ளியில் மனநல தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மனநலம் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
    • தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மன்னார்குடி:

    உலக மனநல தினத்தை யொட்டி மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, நேசக்கரம், திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பு லட்சுமி பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நம்பிக்கை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.

    திட்ட இயக்குனர் விஜயா, மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஆசிரியர் ராஜப்பா, நேசக்கரம் ஆசிரியர் தங்கபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேசக்கரம் ஒருங்கிணை ப்பாளர்கள் கார்த்திகேயன், தீனதயாளன், நேசக்கரம் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெலிக்ஸ், எழிலரசன் மற்றும் கலை குழுவினர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தத்ரூபமாக நடித்து, அவரை எவ்வாறு வழிநட த்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்க ப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×