search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி ஆண்டு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
    X

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பள்ளி ஆண்டு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

    • பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    திருக்காட்டுப்பள்ளி:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா பூதலூர் வட்டார கல்வி அலுவலர் கோமதி தலைமையில் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி பள்ளி செயல் பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார். பூதலூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் குமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்பு சுப்பிரமணியன், திருக்காட்டுப்பள்ளி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடக்க த்தில் ஆசிரியர் தேசிகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஜமுனா ராணி நன்றி கூறினார்.

    Next Story
    ×