search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shows"

    • பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல்.

    மதுக்கூர்:

    தமிழகமெங்கும் மாற்றுத்திற னாளி–களுக்கான விழிப்புணர்வு முகாம் பல்வேறு வகையில் நடத்தப்பட்டு வருகின்றது.

    இதனை அடுத்து தமிழக பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைப்படி இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் மாணவர்களின் மாற்றுத்திறனாளிக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகின்றது.

    இதனை அடுத்து விழிப்புணர் பேரணி, இணைவோம் மகிழ்வோம் என பல்வேறு வகையில் நடைபெற்று வந்தது.

    இதன்படி நேற்று 25-ந்தேதி மதுக்கூர் அருகே மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதன்படி பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், தேசிய பாடல்கள், கரகாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இன்று இனிய முறையில் நடைபெற்றது.

    இந்த கலை நடன நிகழ்ச்சிக்கு மதுக்கூர் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜமீலா அவர்கள் தலைமையேற்று கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் வீரப்ப ராஜா, பிரகாஷ் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்கள் இருதயராஜ், புஷ்பா மற்றும் இயன் முறை மருத்துவர் பழனிவேல் ஆகியோர் இதற்கு ஆன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலும் விளையாட்டுப் போட்டிகள் சிறுவர்களுக்கான சிறார் திரைப்படம் திரையிடுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது.

    • இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    மதுரை

    நடிகர் விஜய் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில், புனித அன்னை தேவாலயம், கோரிப்பாளையம் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    தொடர்ந்து திருநகரில் உள்ள கருணை இல்லத்தில் தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ராம்பாலாஜி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு வாசல் முதியோர் இல்லத்தில் மாநகர இளைஞரணி நிர்வாகி நட்ராஜ் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட நிர்வாகி முத்துக்குமார் ஏற்பாட்டில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நாகனாகுளத்தில் ஹரி, பாண்டி பிரேம் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. அரும்பனூரில் மூர்த்தி ஏற்பாட்டில் நோட்டுப்புத்தகம், அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் ஆண்டார்கொட்டாரத்தில் 300 பேருக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்கள் 100 பேருக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் வடக்கு மாவட்டத்தலைவர் விஜய் அன்பன் கல்லாணை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மாலையில் மத்திய 3-ம் பகுதி ஏற்பாட்டில் கேக் வெட்டி நோட்டுப்புத்தகம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் ஏற்பாட்டில் பொன்மேனி முதியோர் இல்லத்தில் மதிய உணவு, நாகமலை புதுக்கோட்டை நித்திஷ், கண்ணன், செந்தில் ஏற்பாட்டில் அன்னை ஆசிரம முதியோர்களுக்கு இரவு உணவு, மதிச்சியம் ரகு ஏற்பாட்டில் செனாய் நகர் குழந்தைகள் காப்பகத்தில் இரவு உணவு, நோட்டுப்புத்தகம் வழங்கப்படுகிறது.

    ×